Monday, March 26, 2012

அறிவிப்புகளை நிறைவேற்றுவது எப்போது?


 சென்னை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது வெளியிட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளில், பெரும்பாலானவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட, நான்கு அறிவிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ளவை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 17 அறிவிப்புகளை, அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் வெளியிட்டனர். அமைச்சரின் அறிவிப்புகளில், நான்கு அறிவிப்புகள் மட்டுமே, இன்னும் நிலுவையில் இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
* சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு அமைப்பு.
* ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்துதல்.
* கல்வி தகவல் மேலாண்மை முறை.
* பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும், நமது குழந்தைகள் திட்டம்.
மற்ற திட்டங்கள்
* புதிய ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, 2,682 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
* 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், 4,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதற்கும், இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; 1,538 சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிந்த நிலையில், தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
* வேளாண் பயிற்றுனர், 25 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதா அல்லது எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்வதா என, அரசிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
* நூலகத் துறையில், 1,353 நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
* மாணவர்களுக்கான, ஸ்மார்ட் கார்டு திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியும் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற திட்டங்களுக்கு அரசாணை வெளியாகி, முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்ணாவிரத போராட்டம்


உண்ணாவிரதம் 

தேதி : 31.03.2012  சனிக்கிழமை 

இடம்: திருச்சி சத்திரம் பஸ்  நிலையம்             அண்ணா சிலை அருகில் 

நேரம் : காலை 8 மணி  

அன்பார்ந்த பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளே ! 

 1. 6 முதல் 10 வரையான வகுப்புகளுக்கு கணினி அறிவியல்  பாடம் போதிக்க பிஎட் கணினி அறிவியல் பட்டம் பெற்ற  பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

2 . தரம் உயர்த்தப்பட்ட 600க்கும் அதிகமான அரசு மேல்நிலை பள்ளிகளில் +1 , +2 கணினி அறிவியல் பாடம் போதிக்க பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

3. RMSA  , SSA , ICT திட்டங்களில் பிஎட் கணினி பட்டதாரிகளை   நியமிக்க   வேண்டும்.

4. கடந்த தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 1686 கணினி ஆசிரியர் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

5. உயர் நீதிமன்ற நிலுவையில் உள்ள TRB தேர்வில் தோல்வி அடைந்த 667 பணியிடதிற்கான வழக்கை  உடனடியாக அரசு முடிக்க வேண்டும்.
குடும்பத்துடன் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து மாவட்ட பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளும் கலந்து கொண்டால் மட்டுமே நமது கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும். எனவே உண்ணாவிரத போராட்டம் குறித்து அனைத்து மாவட்ட பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளும் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

மேலும் இப் போராட்டத்திற்கு தற்பொழுது பிஎட் படிக்கும் அனைத்து கல்லூரி பட்டதாரிகள் கலந்து கொண்டு போராட்டத்தை  வெற்றிகரமாக நடக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


சிவகங்கை:அரசு பள்ளிகளில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பலர் 
தகுதிக்காண் பருவ உத்தரவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1700 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் 2008ல் சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரமாக்கப்பட்டனர். இவர்களுக்கு தொழிற்கல்வி பிரிவு ஆசிரியர் அந்தஸ்தை அரசு வழங்கியது. இவர்களில் 800 பேர் தவிர, 900 ஆசிரியர்களுக்கு டிசம்பர் 2011க்குள் தகுதிக்காண் பருவம் வழங்கி, மற்ற ஆசிரியர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்கலாம் என்று கல்வித்துறை இணை இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் சிலருக்கு, அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு பின், தகுதிக்காண் பருவம் அளிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை பெற்று வருகின்றனர்.சிவகங்கை, ராமநாதபுர மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தகுதிக்காண் பருவம் கிடைக்காததால் சலுகைகள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான தகுதிக்காண் பருவம் வழங்க, சென்னையிலிருந்து அவரவர் சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கான உத்தரவு, பணிபுரியும் தலையாசிரியர்கள் கையெழுத்திட்டு வர வேண்டும். இரு மாவட்டத்திலும் ஒரு சிலர் தவிர, மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை. அவை கிடைத்தவுடன் உரியவர்களுக்கு தகுதிக்காண் பருவத்திற்குரிய உத்தரவு வழங்கப்படும்'' என்றார்.

தலைமை ஆசிரியர்களுக்குஎஸ்.எஸ்.ஏ., அறிவுரை

பகுதி நேர சிறப்பாசிரியர்களை, வேறு பாடங்களை நடத்தச் சொல்லக் கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்து 684 பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை, வேறு பணிகளை செய்யச் சொல்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பகுதி நேர சிறப்பாசிரியர்களை, அரசாணையில் கூறப்பட்டுள்ள பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். பிற பாடங்களை நடத்த நிர்பந்தம் செய்யக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2012

ஆசிரியர்கள் பணி நியமனம் முறையாக நடக்கவில்லை

தர்மபுரி: "பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் முறையாக நடக்கவில்லை' என கலெக்டரிடம் தர்மபுரி மாவட்ட வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க தலைவர் செல்வம், செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு அறிவித்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் நேர்முக தேர்வு கடந்த டிசம்பர் 26ம் தேதி தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையிலான கல்வி அதிகாரி குழுவினர் நேர்முக தேர்வு நடத்தினர். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடம், 179 பணியிடங்கள்.
அரசு ஆணையில் முறையான கல்வி தகுதி, பதிவுமூப்பு, அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொணடு பணியிடம் வழங்குவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், எங்களுக்கு இளையோர், 2009, 2010 மற்றும் 2011 ஆகிய கல்வியாண்டில் உடற்கல்வி முடித்து பதிவு செய்தவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அவர்களை காட்டிலும் அதிகம் இருந்தும், கல்வி தகுதி இருந்தும் எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநியமனம் முறையாக நடக்கவில்லை. குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு பணி கிடைத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள்

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், 22ம் தேதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிவோர் மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வகை தேர்வுகளாக, ஜூன் 3ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. எனினும், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, ""பாட வாரியாக, பாடத் திட்டங்களை தயாரித்து, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலையும் பெற்று விட்டோம். ஆனால், அவை இன்னும் அரசின், "கெஜட்டில்' வெளியாகவில்லை. விண்ணப்பங்களை வழங்குவதற்குள் இணையதளத்தில் பாடத் திட்டங்கள் வெளியிடப்படும்,'' என்றனர்.

நியமனத்தில் முறைகேடு : ஆசிரியர்கள் புகார் மனு

விழுப்புரம் :பகுதிநேர ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஓவிய ஆசிரியர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஓவிய ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது : எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 402 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், தகுதிகள் அடிப்படையில் நியமிக்கப்படுமென அறிவித்தனர். தற்போது வழங்கியுள்ள பணி நியமனத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு, இன சுழற்சி, உயர் கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட அரசின் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை.
முறைகேடான நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தகுதியுள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்திருந்தனர்.

Tuesday, March 13, 2012

பணி நேரம் தெரியாமல் பகுதி நேர ஆசிரியர்கள் குழப்பம்

மதுரை: பள்ளிகளில் பணி நாட்கள் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிடப்படாததால், புதிதாக பொறுப்பேற்ற பகுதி நேர ஆசிரியர்கள், குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீட்டு முகவரிக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதில் பணிபுரிய வேண்டிய பள்ளியை குறிப்பிட்டு, 7 நாட்களுக்குள் சேரும்படி தெரிவிக்கப்பட்டது. பகுதி நேர பணி என்பதால், இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பள்ளிகளில் பணி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமுற்றனர். சிலருக்கு, வேறு மாவட்டங்களில் பணி ஒதுக்கப்பட்டது. பணி ஒதுக்கீடு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பணி உத்தரவுடன் சென்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கத் தயங்கினர். முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்திய பின், ஆசிரியர்கள் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர். புதிய ஆசிரியர்கள், வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு, தலா 3 மணி நேரம் பணிபுரிய வேண்டும். எந்த மூன்று நாள்கள், எந்த நேரங்களில் பணிபுரிய வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. காலை 9 முதல் 12 மணி வரை பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு, மின் வெட்டு அமலில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பள்ளிகளில் தையல் மிஷின்கள் இல்லை. ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணிபுரியும் பட்சத்தில், அதே பள்ளியில் அதே பாட பிரிவுக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பகுதிநேர ஆசிரியர்களுக்கு மூன்று மணி நேர பணி குறித்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுநேரமும் பணிபுரிய வேண்டும் என, சில தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவதாக புகார் வந்தது. தையல் மிஷின் இல்லாதது, ஒரு பாடத்துக்கு இரு ஆசிரியர் பிரச்னை குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி தெளிவுபடுத்தப்படும்'' என்றார்.

Friday, March 9, 2012

ஜுன் 3-ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம்


சென்னை, மார்ச்.7-

ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் வருகிற 22-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

சுயநிதி பள்ளிகளில் பி.எட். படிக்காமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 வருடங்களுக்குள் பி.எட்.படிக்கவேண்டும். பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

1-வது முதல் 8-வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும். பிளஸ்-2 படித்துவிட்டு 2 வருட ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாள் பரீட்சையை எழுதவேண்டும். பி.எட். படித்தவர்கள் 2-வது தாள் பரீட்சையை எழுதவேண்டும். சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளையும் எழுதவேண்டும்., 2-வது தாளையும் எழுதவேண்டும்.

விண்ணப்பம்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.50.

விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து `ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

பாடத்திட்டம்

தேர்வு ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வில் ஆப்ஜெக்ட் முறையில் கேள்விகள் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியானதாக இருக்கும். 3 பதில்கள் தவறாக இருக்கும்.

ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு தேதி இப்போதைக்கு தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் முந்தவும் சில நாட்கள் பிந்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்வை 7 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

Wednesday, March 7, 2012

சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: தகுதியிருந்தும் புறக்கணிப்பு

தேனி: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு வெளியாகி உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிராகரிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தனர்.

டி.திருப்பதி,தேவதானப்பட்டி: கட்டட கட்டுமான ஆசிரியர் பணிக்கான நேர்க்காணலில் பங்கேற்றேன்.1985ல் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளேன்.

ஆர்.ரமேஷ்,போடி: கட்டட கட்டுமான பணி ஆசிரியர் பணிக்கு 1987ல் பதிவு செய்துள்ளேன். தகுதி இருந்தும் பணி உத்தரவு வரவில்லை.

கன்னிகா,சின்னமனூர்: ஓவிய ஆசிரியருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து ஓவியத்தில் உயர் தகுதி பெற்றுள்ளேன். 2000-ல் பதிவு செய்துள்ளேன். எனக்கு பின் பதிவு செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைத்துள்ளது.

சி.சின்னச்சாமி,கோவில்பட்டி: ஓவிய ஆசிரியர் பணிக்கு சீனியாரிட்டி இருந்தும், பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீதேவி:(முதன்மை கல்வி அலுவலர்): மாவட்டத்தில் 1,700 பேரிடம் நேர்க்காணல் நடந்தது. தகுதி,திறமை அடிப்படையில் 274 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிடம் நியமன ஆணை-06-03-2012

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.ஏ., மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து 2,532 பேருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது. தேர்வுக்குழுவினர் மதிப்பெண், வருமானம், சான்றுகள் சரிபார்த்து துறை சார்ந்த அறிவு குறித்து நேர்முகத்தேர்வு நடத்தினர். மொத்தம் 1,381 பேரை தேர்வு செய்தனர்.
இவர்களில்,  உடற்கல்வி ஆசிரியர் 73 பேர், ஓவிய ஆசிரியர் 106, தையல் 80, வாழ்க்கை கல்வி 4, கட்டடகலை 2, தோட்டக்கலை துறைக்கு ஒருவர், கம்ப்யூர்ட்டர் சயின்ஸ் 206, இசை ஆசிரியர் 27 பேர் என, மொத்தம் 499 பேருக்கு பணி நியமன கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்றுள்ள சிறப்பு ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளில் உடனடியாக பணியில் சேர பள்ளி கல்விதுறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

R.K.PET: ணினி பயிற்றுனர்  பணியிடத்திற்கு நான் (பாண்டியன்) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 
தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.