Wednesday, March 7, 2012

சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிடம் நியமன ஆணை-06-03-2012

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.ஏ., மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து 2,532 பேருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது. தேர்வுக்குழுவினர் மதிப்பெண், வருமானம், சான்றுகள் சரிபார்த்து துறை சார்ந்த அறிவு குறித்து நேர்முகத்தேர்வு நடத்தினர். மொத்தம் 1,381 பேரை தேர்வு செய்தனர்.
இவர்களில்,  உடற்கல்வி ஆசிரியர் 73 பேர், ஓவிய ஆசிரியர் 106, தையல் 80, வாழ்க்கை கல்வி 4, கட்டடகலை 2, தோட்டக்கலை துறைக்கு ஒருவர், கம்ப்யூர்ட்டர் சயின்ஸ் 206, இசை ஆசிரியர் 27 பேர் என, மொத்தம் 499 பேருக்கு பணி நியமன கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்றுள்ள சிறப்பு ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளில் உடனடியாக பணியில் சேர பள்ளி கல்விதுறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

R.K.PET: ணினி பயிற்றுனர்  பணியிடத்திற்கு நான் (பாண்டியன்) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 
தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. how many school's appointed for u..........

    ReplyDelete