Saturday, September 29, 2012

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர‌ ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர‌ ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், இன்று பொதட்டூர்பேட்டையில் நடந்தது. இதில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்ட, தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சஙக‌த்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






















வி.ஏ.ஓ., தேர்வு: ""இப்போது எதுவும் செய்ய முடியாது"

காரைக்குடி: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. விண்ணப்பிக்கும்போது, எதுவும் தெரிவிக்காமல், தேர்வு எழுதுவதற்கு முன்பு, ஹால் டிக்கெட் கிடைக்காததால், பலர் கட்டிய பணத்துக்கு பதில் தெரியாமல்,ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காரைக்குடி கோட்டையூரை சேர்ந்த பூரணபுஷ்கலை கூறியதாவது:

எம்.பி.சி., வகுப்பை சேர்ந்த நான் கடந்த 12.04.1971ல் பிறந்தேன். டிகிரி முடித்துள்ளேன். வி.ஏ.ஓ., தேர்வுக்காக 11.7.2012ல் விண்ணப்பித்தேன்.ஆனால் 1.7.2012ல் 40 வயது முடிந்து விட்டது என வருகிறது. இதற்கான விண்ணப்பத்தொகையை "நெட் பேங்கிங்' மூலமாக செலுத்தினேன். அப்பொழுது அப்ளிகேஷன், ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது ஹால் டிக்கெட் வரும்போது, வயது முடிந்து விட்டது, என வருகிறது. எம்.பி.சி., வகுப்பை சேர்ந்த டிகிரி முடித்தவர்களுக்கு, வயது வரம்பு இல்லை, என்று சொல்கின்றனர். 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், என கூறப்படுகிறது. 18 முதல் 20 வயது உள்ளவர்களுக்கு, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 40 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்ணப்பத்துக்குரிய தொகையை வாங்கி கொண்டு, ஹால் டிக்கெட் பெறும்போது, நிராகரிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இதே போல் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பாக அவர்கள் கூறும் "டோல் ப்ரீ நம்பரில்', தொடர்பு கொண்ட போது, ""இப்போது எதுவும் செய்ய முடியாது, அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகின்றனர். கடந்த இரண்டு மாதமாக, இரவு பகல், பாராது படித்திருந்தேன். அனைத்தும் வீணாகி விட்டது, என்றார்.

 

Your application has been rejected for Under / Over aged as on 01.07.2012 as per the Notification No.26/2012
Online Reg_id
Initial
Name
Date Of Birth
Age as on
Years / Months / Days
2606144 E PANDIAN 06-04-1972 40 / 2 / 25
  * Note: Candidate may represent with valid reason / proof on or before 25.09.2012 through email: contacttnpsc@gmail.com
  (Documentary evidence to be sent as attachment with mail message)

Thursday, September 27, 2012

காலாண்டுத் தேர்வு: "சுரா' "ரிலீஸ்'

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வின் கேள்வித்தாள், "சுரா' எனும், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இம்மாதம், 14ம் தேதி காலாண்டுத் தேர்வு துவங்கி, 25ம் தேதியுடன் முடிந்தது. அரசின் உத்தரவை அடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை போல, பிற வகுப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக, ஒரே மாதிரியான கேள்வித்தாளும், ஒரே நாளில் தேர்வும் நடத்தப்பட்டன. காலாண்டுத் தேர்வில், ஏழாம் வகுப்பு கணிதத் தேர்வில், அரசு வழங்கிய கேள்வித்தாளை பார்த்த, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுரா நோட்சின் மாதிரித்தாளில் உள்ள கேள்விகள் பலவும், அச்சுப்பிசகாமல் அப்படியே கேட்கப்பட்டிருந்தன.
 இதையறிந்த சில பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம், அடுத்து வரும் அறிவியல் பாடத் தேர்வுக்கும், சுரா நோட்சில் உள்ள, மாதிரி கேள்வித்தாளில் உள்ளனவற்றை படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அறிவியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த, 95 சதவீதம் கேள்விகள், சுரா நோட்சில் இருந்த கேள்விகளாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, நோட்சில் இருந்த, மாதிரி கேள்வித்தாளின் வரிசைப்படியே, அரசு கேள்வித்தாளிலும், வரிசைப்படுத்தி, அச்சு பிசகாமல் கேட்டிருந்தனர்.
தேர்வை எழுதிய மாணவர்கள், சுரா நோட்சை தேடி, கடை கடையாக அலைந்துள்ளனர். கிடைத்தவர்கள் வாங்கி வந்து, எஞ்சிய சமூக அறிவியல் தேர்வுக்கும் படித்துள்ளனர். ஆனால், சமூக அறிவியல் தேர்வு கேள்வித்தாள் முற்றிலும் மாறுபட்டிருந்தது.
தனியார் நிறுவன நோட்சின், மாதிரி கேள்வித்தாளுடன், 95 சதவீதம் ஒத்துப்போகும்படி, காலாண்டுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்தது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு உதவியோர் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?.