Friday, January 31, 2014

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை: ஆலோசனை மட்டுமே

பிப்ரவரி 2ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில், காலை 10 மணிக்கு, பஸ் நிலையம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கணினி பட்டதாரிகள் மற்றும் கணினி பகுதி நேர ஆசிிரயர்கள், கணினி பி.டி.ஏ ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு கூட்டம் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, பலரும் இது சான்றிதழ் சரிபார்ப்பு என நினைத்து அலைபேசியில் சந்தேகம் கேட்டு வருகின்றனர்.
சா...ன்றிதழ் சரிபார்ப்பு எதுவும் கிடையாது. இது, நமது பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் தான். சான்றிதழ் எதுவும் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: 9786906275 8148917745 9840772600, 9444187741, 94444526216, 9444069120, 9751393838.

முகநுால் மற்றும் வலைதளங்கள் மூலமாக இந்த தகவல் மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த செய்தியை தங்களின் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும், பட்டதாரிகளின் அலைபேசி எண்களை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.

2ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளேடுகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குறிப்பு: கூட்டத்திற்கு வரும் பட்டதாரிகள், சனிக்கிழமை மாலைக்குள், தங்களின் வருகை குறித்து 8148917745 என்ற எண்ணிற்கு sms மூலம் உறுதி செய்யவும். எத்தனை பேர் கூட்டத்திற்கு வர உள்ளனர் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும்.

Thursday, January 30, 2014

கணினி ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

கணினி பட்டதாரிகள் மற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களின் கலந்தாலோசனை கூட்டம் வரும் 2 ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் நடைபெற உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு 30ம் தேதி தினமலர் நாளிதழை http://www.dinamalar.com/district_detail.asp?id=906048 காணவும்.
தொடர்புக்கு: 8148917745 , 7373892058, 9444187741.

பதிவு செய்த நாள்
29 ஜன...
2014
21:57 ஆர்.கே.பேட்டை : கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு
கூட்டம் நடத்த முடிவு
செய்துள்ளனர்.
கணினி பட்டதாரி ஆசிரியர்கள், இதுவரை, 175 பேர் மட்டுமே முறையான அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது, மாவட்டத்தில், 300 பேர் பி.எட்., பட்டம் பெற்று வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்களாக, 210 பேர் பணியாற்றி வருகின்றனர். திட்டம் வரும் மார்ச் மாதம் முடிவடையும் நிலையில், இவர்களின் பணி குறித்து, அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒப்பந்த அடிப்படையில், 4,430 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, பட்டதாரிகளிடையே தகவல் பரவி வருகிறது.
இதனால், குழப்பத்தில் உள்ள கணினி பட்டதாரி கள் வரும், 2ம் தேதி, ஆர்.கே.பேட்டையில், கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதில், தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். தங்களுக்குள் ஒரு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.