Thursday, September 8, 2011

ஆசிரியர் பணி நியமனத்தில் குழப்பம்


அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான தகுதியும், திறமையும் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளுக்காக கடந்த 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) உருவாக்கப்பட்டது.

இந்த ஆசிரியர் தேர்வு வாரியம்தான் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வருகிறது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. பின்னர்தான் 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.

1987க்கு பிறகு முதல்வராக கருணாநிதி பொறுப்பில் இருந்தார். அப்போது தான் முதன் முதலாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தார். இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்பட்டது. பட்டதாரிகள் தேர்வு எழுதி நேர்காணலில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றனர்.

பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
புதிய நியமன கொள்கை அவசியம்
ஓய்வு பெறுவதால், புதிய பள்ளிகள் துவங்குவதால், பள்ளிகளின் தரம் உயர்த்துவதால் ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் பணி இடங்களில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டியது அரசின் முதல் கடமையாகும். மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னிலை பெற வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சாரத்தை உயர்த்தி ஆசிரியர் நியமனம் இருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக் கூடாது. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தால் ஆசிரியர் பணி நியமனத்தில் குழப்பம் நிலவுகிறது.
பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு அதோடு ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நியமனத்துக்காக காத்திருப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தேவையான அடிப்படை கல்வி, பயிற்சியை கல்வி நிறுவனங்களில் படித்து முடித்துவிட்டுதான் பணி நியமனத்துக்காக ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர் நியமனத்தில் ஆட்சியாளர்கள் உறுதியான கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவு அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலும் அதே நேரத்தில் தரம் நிறைந்ததாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். பதிவுமூப்பு செய்தவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல், புதிதாக படித்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் புதிய நியமனக் கொள்கையை உருவாக்கலாம்.

பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.

அதற்கு பிறகு 1996&2001 வரை முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கினார்.

அதற்கு பிறகு 2001&2006 வரை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வந்தார். அப்போதும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். பதிலாக ரூ.3000&4000 தொகுப்பு ஊதியத்தின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் 2006ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பதிவு மூப்பு அடிபடையில் பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அதன்படி 2006&2011 மே மாதம் வரை 55000 ஆசிரியர்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றனர். ஆட்சியின் இறுதியில்கூட 6000 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெறாமல் உள்ளனர்.

தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2682, பட்டதாரி ஆசிரியர் 5790, இடைநிலை ஆசிரியர் 4342, சிறப்பாசிரியர் 1538, வேளாண் பயிற்றுநர் 25 என மொத்தம் 14377 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். பின்னர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விதி 110ன் கீழ் 13300 பட்டதாரி ஆசிரியர்களும், 16549 பகுதி நேர ஆசிரியர்களையும் நியமிக்கப் போவதாக அறிவித்தார்.

மேற்கண்ட ஆசிரியர் நியமனங்கள் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமா என்று முதல்வரோ, பள்ளிக் கல்வி அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்தி தெரிவு செய்வதா, அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதா என்பதில் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் �தேர்வு நடத்தியே பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்� என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
காத்துக்கிடப்பவர்களுக்கு
சீனியாரிட்டி தான் நல்லது
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்(ஐபெட்டோ) தென்னிந்திய செயலாளர் வா.அண்ணாமலை கூறியதாவது:
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கினால், இதுவரை பதிவு செய்து விட்டு காத்துக்கிடக்கும் பட்டதாரிகள் பயன் பெறுவார்கள். அப்படி அல்லாமல் தேர்வு நடத்தினால் இந்த ஆண்டு படித்து முடித்தவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பயிற்சி இருக்காது. எழுத்து தேர்வை பொறுத்தவரை நேர்மையாக நடக்கலாம். ஆனால் அதற்கு பிறகு நேர்க்காணல் நடத்தப்படும். அதில் ஒரு பதவிக்கு 5 பேர் அழைக்கப்படுவார்கள். அப்போது ஆட்சியாளர்களின் பெயரைச் சொல்லி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளே தங்களுக்கு வேண்டியவர்களை பாஸ் செய்ய வைத்துவிடுவார்கள். அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளின் தலையில் பழியைப் போட்டு ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கலாம். எப்படி இருந்தாலும் நேர்காணல் முறையில் தவறு நடக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ரத்தினக்குமார் கூறியதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கும் தேர்வே சரியான வழி என்றும், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்வது சரியான வழியல்ல என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவுகோல் மூலம் அறிந்த முடிவு? 20 ஆண்டுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்து கிடப்போர் பலர். அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியல்லாதவர்கள் என்பது சரியா?
பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் என்று காத்திருப்போரில், தேவைக்கு அதிகமான கல்வி தகுதியை பெற்றுள்ளவர்களும் இருக்கின்றனர் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?
கடந்த ஆட்சியில் 22800 பட்டதாரி ஆசிரியர்களும் 3200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு வாயிலாக 34000 பேர் பணி அமர்த்தப்பட்டனர். பிறகு பொதுத் தேர்வில் வருடா வருடம் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 2 முதல் 3 சதவீதம குறைந்தது. 2002 முதல் 2006ம் ஆண்டு வரை இந்த நிலைதான்.
2007 முதல் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பிறகு தேர்ச்சி வீதம் 3 முதல் 4 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை அதிகாரிகள் சொல்வதில்லை. பதிவு மூப்பு மூலம் பணி நியமனம் பெறுபவர்களில் 90 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில் பணியாற்றியவர்கள். 10 சதவீதம் பேர் அவ்வாறு பயிற்சி பெறாதவர்கள். எனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தால்தான் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும்.
காத்துக்கிடக்கும் நிலை யாரால் ஏற்பட்டது?
இதுவரை காத்திருந்து வயது முதிர்ந்த காலத்தில் தேர்வு நடத்துவதை பட்டதாரிகள் ஏற்கவில்லை. ஆனால் புதிய பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டால் தரமான கல்வி வழங்கலாம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முன்பெல்லாம் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்தபோது தரமான கல்வி இல்லையா?
இப்போது பட்டப் படிப்பு படித்துவிட்டு வரும் புதியவர்களுக்கு வல்லினம், மெல்லினமே தெரியவில்லை. புதியவர்களுக்கே பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பதிவு மூப்பு பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் வேலை செய்து வருவதால் அவர்களுக்கு டீச்சீங் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளது. இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தியதின் காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை 46 பேர் பிடித்துள்ளனர். இது எந்த ஆண்டும் நிகழாத சாதனை. புதியதாக படிப்பு முடித்தவர்கள் எப்படி தரமான கல்வியை வழங்குவார்கள்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்வியாளர்கள்
என்ன
சொல்கின்றனர்?

No comments:

Post a Comment