Friday, January 31, 2014

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை: ஆலோசனை மட்டுமே

பிப்ரவரி 2ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில், காலை 10 மணிக்கு, பஸ் நிலையம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கணினி பட்டதாரிகள் மற்றும் கணினி பகுதி நேர ஆசிிரயர்கள், கணினி பி.டி.ஏ ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு கூட்டம் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, பலரும் இது சான்றிதழ் சரிபார்ப்பு என நினைத்து அலைபேசியில் சந்தேகம் கேட்டு வருகின்றனர்.
சா...ன்றிதழ் சரிபார்ப்பு எதுவும் கிடையாது. இது, நமது பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் தான். சான்றிதழ் எதுவும் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: 9786906275 8148917745 9840772600, 9444187741, 94444526216, 9444069120, 9751393838.

முகநுால் மற்றும் வலைதளங்கள் மூலமாக இந்த தகவல் மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த செய்தியை தங்களின் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும், பட்டதாரிகளின் அலைபேசி எண்களை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி.

2ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளேடுகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குறிப்பு: கூட்டத்திற்கு வரும் பட்டதாரிகள், சனிக்கிழமை மாலைக்குள், தங்களின் வருகை குறித்து 8148917745 என்ற எண்ணிற்கு sms மூலம் உறுதி செய்யவும். எத்தனை பேர் கூட்டத்திற்கு வர உள்ளனர் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment