Saturday, February 1, 2014

பணம் தேவையில்லை: வருகை மட்டுமே போதுமானது

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் நாளை நடைபெறும் கணினி பட்டதாரிகள் கூட்டத்திற்கு, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கணினி பட்டதாரிகள் வர விருப்பம் தெரிவி்த்துள்னர். அலைபேசி வாயிலாக எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
தொலை துார நண்பர்களின் ஆர்வம், அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். போக்குவரத்து சிரமம் கருதி, நேரில் வராமல் இணையத்தில் கூட்டத்தின் தீர்மானம், நடவடிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
நேரில் வந்து கலந்து கொள்வர்களின் கருத்துக்கள் முழுமையாக வெளியிட ஏற்பாடு செய்கிறோம்.


கணினி பெண் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாமா, என சிலர் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இருபாலரும் கலந்து கொள்ளலாம். மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணம் தர வேண்டுமா என்ற கேள்விக்கும் இடம் இல்லை.
பட்டதாரிகள் கூட்டத்திற்கு வந்து தங்களி்ன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலே போதுமானது.


தொடர்புக்கு: 8148917745, 9786906275, 9444187741, 9840772600, 7373892058

No comments:

Post a Comment