Monday, December 15, 2014

அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா?

ஞாபகம் இருக்கிறதா?

காலியாக இருக்கும் 1440 கணினி ஆசிரியர்  பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள், நிரப்ப வேண்டும் என கோர்ட் உத்தரவு இட்டது. இது நடந்தது 2013ல்...

இப்ப, 2015 ஜனவரி வந்து விட்டது. அதாவது 16 மாதங்களுக்கு  முன், இதில், இரண்டு கல்வியாண்டுகள் ஓடிவிட்டன. ஆசிரியர்களே இல்லாமல், இரண்டு ஆண்டு கணினி பிரிவு மாணவர்கள் தட்டு தடுமாறி, தேறினார்களோ, திசைமாறினார்களோ தெரியாது.

இந்நிலையில், தற்போது, கோர்ட் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதாவது,  652 பணியிடங்களை மட்டும் நிரப்ப, சான்றிதழ் சரிப்பார்ப்பு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவி்த்துள்ளது. இதற்கான பதிவுமூப்பு பரிந்துரை பட்டியலில், உள்ள குளறுபடிகளை தினசரி நாளேடுகள் சுட்டிக்காட்டியபோதும், அதை சரி செய்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1440 காலி இடங்களுக்கு தேர்வு செய்யும் பணி நடக்கிறதா என்றால், அதுவும் இல்லை. வெறும் 652 இடங்களை மட்டும் நிரப்பப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா? மீதமுள்ள 788 பள்ளிகளில் கணினி  ஆசிரியர்கள் இல்லாமல் கணினி பிரிவில் படித்து வரும் மாணவர்களின் நலனை யார் பாதுகாப்பது?

No comments:

Post a Comment