Tuesday, August 30, 2011

பி.எட். சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்:


பி.எட். சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

First Published : 30 Aug 2011 01:59:52 AM IST


விழுப்புரம், ஆக. 29: பி.எட். சான்றிதழ்கள் வழங்கப்படும் கல்லூரிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.த.மணிமேகலை தெரிவித்துள்ளார்.
 ÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பி.எட். கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், தேர்ச்சி பெற்று சான்று பெற தாங்கள் படித்த கல்லூரிக்குச் செல்லும்போது ஏற்கெனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டப்படிப்பு வரை பதிவு செய்த அடையாள அட்டையுடன் தாங்கள் படித்த கல்லூரிக்கு சென்று பி.எட். சான்றிதழை கூடுதல் கல்வித் தகுதியாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
 ÷ஏற்கெனவே வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்கள் மற்றும் இதுவரை வேலைவாய்ப்பகத்திலேயே பதிவு செய்யாதவர்களும் தங்களது பெயர் இடம் பெற்ற ரேஷன் கார்டு, பட்டப்படிப்பு சான்று மற்றும் பி.எட். சான்றையும் அன்றே இணையதளம் மூலம் கல்லூரிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment