Wednesday, March 7, 2012

சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: தகுதியிருந்தும் புறக்கணிப்பு

தேனி: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு வெளியாகி உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிராகரிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தனர்.

டி.திருப்பதி,தேவதானப்பட்டி: கட்டட கட்டுமான ஆசிரியர் பணிக்கான நேர்க்காணலில் பங்கேற்றேன்.1985ல் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளேன்.

ஆர்.ரமேஷ்,போடி: கட்டட கட்டுமான பணி ஆசிரியர் பணிக்கு 1987ல் பதிவு செய்துள்ளேன். தகுதி இருந்தும் பணி உத்தரவு வரவில்லை.

கன்னிகா,சின்னமனூர்: ஓவிய ஆசிரியருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து ஓவியத்தில் உயர் தகுதி பெற்றுள்ளேன். 2000-ல் பதிவு செய்துள்ளேன். எனக்கு பின் பதிவு செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைத்துள்ளது.

சி.சின்னச்சாமி,கோவில்பட்டி: ஓவிய ஆசிரியர் பணிக்கு சீனியாரிட்டி இருந்தும், பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீதேவி:(முதன்மை கல்வி அலுவலர்): மாவட்டத்தில் 1,700 பேரிடம் நேர்க்காணல் நடந்தது. தகுதி,திறமை அடிப்படையில் 274 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.

1 comment:

  1. தமிழ்நாட்டில் பல்கலைகழகங்கள் தகுதி மிகக்குறைவாக இருப்பதால் தான் தகுதி தேர்வு வைக்கப்படுகிறது, இதற்கு காரணம் அரசு லஞ்சம் வாங்கிக்கொண்டு தர குறைவான கல்லூரியை திறந்து விடுகிறார்கள். இதற்கு மாணவர்கள் பலி ஆகிவிடுகிறார்கள். பின் அரசு மற்றவர்களை குறை கூறுவது.
    நண்பர்களே கவலை படாதீர்கள் மத்திய மற்றும் மாநில அரசை மாற்றுவதன் மூலம் இந்த தகுதி தேர்வு, NET/SLET தேர்வுகளை தடை செய்ய முடியும். இதற்கு நீங்கள் தான் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். சமீபத்தில் வந்த தேர்தல் முடிவுகள் இதற்கு சாதகமாக இருப்பது நமக்கு பலம்.

    ReplyDelete