Monday, March 26, 2012

உண்ணாவிரத போராட்டம்


உண்ணாவிரதம் 

தேதி : 31.03.2012  சனிக்கிழமை 

இடம்: திருச்சி சத்திரம் பஸ்  நிலையம்             அண்ணா சிலை அருகில் 

நேரம் : காலை 8 மணி  

அன்பார்ந்த பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளே ! 

 1. 6 முதல் 10 வரையான வகுப்புகளுக்கு கணினி அறிவியல்  பாடம் போதிக்க பிஎட் கணினி அறிவியல் பட்டம் பெற்ற  பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

2 . தரம் உயர்த்தப்பட்ட 600க்கும் அதிகமான அரசு மேல்நிலை பள்ளிகளில் +1 , +2 கணினி அறிவியல் பாடம் போதிக்க பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

3. RMSA  , SSA , ICT திட்டங்களில் பிஎட் கணினி பட்டதாரிகளை   நியமிக்க   வேண்டும்.

4. கடந்த தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 1686 கணினி ஆசிரியர் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

5. உயர் நீதிமன்ற நிலுவையில் உள்ள TRB தேர்வில் தோல்வி அடைந்த 667 பணியிடதிற்கான வழக்கை  உடனடியாக அரசு முடிக்க வேண்டும்.
குடும்பத்துடன் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து மாவட்ட பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளும் கலந்து கொண்டால் மட்டுமே நமது கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும். எனவே உண்ணாவிரத போராட்டம் குறித்து அனைத்து மாவட்ட பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகளும் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

மேலும் இப் போராட்டத்திற்கு தற்பொழுது பிஎட் படிக்கும் அனைத்து கல்லூரி பட்டதாரிகள் கலந்து கொண்டு போராட்டத்தை  வெற்றிகரமாக நடக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment