Friday, May 4, 2012

ஆசிரியர்களை பள்ளி்க்‌குள் விட மறுப்பு

பழனி: 10 -ம் வகுப்பிற்கான விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு தாமதாக வந்த ஆசிரியர்களை பள்ளி்க்‌குள் விட மறுப்பு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்‌ போராட்டம் நடத்தினர்.

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழனி கல்வி மாவட்டதை சேர்ந்த ஆசிரியர்கள் 10-ம் வகுப்பிற்கான விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம் போல் இன்று பணிக்கு வந்த ஆசிரியர்கள் பணி்‌க்கு தாமதமாக வந்ததாக கூறி பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள்கூடுதல் பேப்பர்கள் திருத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு மறுப்பு‌ தெரிவித்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிசெய்ய தடை விதிக்கின்றனர் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment