Tuesday, November 29, 2011

பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதி நேர தொழிற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதி நேர தொழில் ஆசிரியர், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணி நியமனம், இதர பணி நியமனத்திற்கு முன்னுரிமை கோர இயலாது.
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதியான சிறப்பாசிரியர் கல்வி தகுதி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கல்வி தகுதியும் பெற்றவர்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியிடம் தொடர்பான விபரங்கள் தகவல் பலகையில் தெரிந்து கொண்டு, உரிய விண்ணப்பத்தை பெற்று, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே வரும் டிச., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment