Tuesday, January 3, 2012

தற்காலிக ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

சிவகங்கை : தற்காலிக ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சிவகங்கையில் துவங்கியது. நடு,உயர்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.5,000 சம்பளத்தில் இசை, ஓவியம், உடற்கல்வி, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்ட அரசு நடுநிலை,உயர்நிலைப்பள்ளிகளில் 265 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் திலகவதி, சுவாமிநாதன், தொடக்க கல்வி அலுவலர் கோமளவேணி உள்ளிட்டோர் சான்று சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜன., 5ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடைபெறும்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=377965

No comments:

Post a Comment