Thursday, January 5, 2012

பட்டதாரி ஆசிரியர்கள், டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை

சென்னை : பணி நியமன உத்தரவு வழங்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முந்தைய தி.மு.க., ஆட்சியில், தொடக்க கல்வித் துறைக்குத் தேர்வான, 1,155 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவு வழங்கக் கோரி, நேற்று காலை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை, கோவை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 100க்கும் மேற்பட்டவர்கள், பணி நியமனம் கோரி கோஷமிட்டனர். பின், சிலர் மட்டும் இயக்குனர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இயக்குனர் இல்லாததால், இணை இயக்குனர் ராமராஜனை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினர். வழக்கம் போல், "பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, இணை இயக்குனர் உறுதியளித்ததாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment