Thursday, February 9, 2012

2012-ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 18 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னை, பிப். 6:  முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, புதிதாக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியிடங்கள் என சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.அதன் பிறகு, தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளுக்கு என கூடுதலாக 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18,311 ஆக அதிகரித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு? இந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,895 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாகியுள்ளதன் மூலம் இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலோ, எழுத்துத் தேர்வின் மூலமாகவோ அவர்களை நியமிப்பது தொடர்பாக அரசு விரைவில் ஆணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை அவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பட்டதாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இந்த ஆண்டு நடைபெறும் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை இறுதிசெய்யும் பணியில் தமிழக அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தகுதித் தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது.தேர்வு செய்யப்படும் 
 
ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள்     -    2,895 
பட்டதாரிஆசிரியர்கள்    -    18,311
இடைநிலைஆசிரியர்கள்    -    5,451 
ஆசிரியர்பயிற்றுநர்கள்    -    634
சிறுபான்மைமொழிப்பாடஆசிரியர்கள்    -    32
உடற்கல்விபயிற்சி ஆசிரியர்கள்    -    687
தையல் ஆசிரியர்கள்    -    47
இசை ஆசிரியர்கள்    -    41
ஓவிய ஆசிரியர்கள்    -    78
விவசாய ஆசிரியர்கள்    -    25
மொத்தம்    -    28,201

No comments:

Post a Comment