Sunday, February 26, 2012

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பல்வேறு பணிக்கு நேர்காணல்

சிவகங்கை :""அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில்,ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்டன்ட் பணிக்கு நேர்காணல் நடைபெறும்,'' என முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட 12 வட்டார வள மையங்களில், 12 எம்.ஐ.எஸ்., ஒருங்கிணைப்பாளர், 12 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், 24 அக்கவுண்டன்ட் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், காலை 10 மணிக்கு நடக்கும்.
எம்.ஐ.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ., முடித்திருக்கவேண்டும். இதற்கான ஊதியம் ரூ.8,000. பிப்.,27ல் நேர்காணல் நடக்கும்.
பிப்.,28ல் 12 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு நேர்காணல் நடக்கும். ஏதேனும் பட்டம் மற்றும் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தமிழ் ஆங்கிலம் டைப்ரைட்டிங் உயர் தகுதி பெற்றிருக்கவேண்டும். மாத சம்பளம் 6,000 ரூபாய்.
பிப்.,29ல் 24 அக்கவுண்டன்ட் பணிக்கு நேர்காணல் நடக்கும். பி.காம் உடன் கம்ப்யூட்டரில் டேலி முடித்திருக்கவேண்டும்.
மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம். இத்தகுதியுள்ள நபர்கள், ஒரிஜினல் சான்றுடன் போட்டோ, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன் அனுபவ சான்றுடன் நேரடியாக வரவும், என்றார்.

தினமலர்  26/02/12

No comments:

Post a Comment