Thursday, February 23, 2012

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு :விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

சென்னை, பிப்.21:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், இந்த ஆண்டு 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக அறிவித்தார். 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்த தகுதித் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வை எப்படி நடத்துவது என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், இப்போது தகுதித் தேர்வு நடத்துவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு குறித்த முழு விவரம் அரசு கெசட்டில் வெளியிட உள்ளனர்.
இதன்படி தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல், குழந்தைகள் மேம்பாடு ஆகியவை பொதுவாக வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இடம் பெறும் கேள்விகளுக்கு எல்லோரும் விடை அளிக்கவும், பின்னர் பாடங்களுக்கு ஏற்ப தனித்தனியாக விடை அளிக்கும் வகையிலும், தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு விதிகளை அடிப்படையாக கொண்டே தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
எனவே, என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு போலவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. ஆனால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக கேள்விகள் அமையா மல் 3 பிரிவுகளில் பாடங் களை பிரித்து அதற்குரிய கேள்விகள் இடம் பெற உள்ளன. அதனால் வரலாறு, புவியியல் பாடங்களை படித்தவர்களும் கணக்கு, அறிவியல் பாட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பட்டதாரிகள் உஷாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment