Monday, April 16, 2012

16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் :



அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை "அனைவருக்கும் கல்வி இயக்கம்' அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்:

தேர்வுக் குழு உறுப்பினர்கள்:

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும்.

தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும்.
 பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.

 இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும்.தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது.அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது.

இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார்.

இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

Schedule for posting of Part-time Instructors

1.Advertising in the Dailies
1.12.2011 to 10.12.2011 (10days)

2.Last date for receiving of application form
15.12.2011 (5 days)

3.Scrutiny of received application form
16.12.2011  to  18.12.2011 (3 days)

4.Sending of call letters
19.12.2011 -  25.12.2011 (7 days)

5.Conducting of interview  and Selection of Candidates
26.12.2011  to  15.01.2012  (21 days)

6.Sending of appointment order, posting in the notice board and website
16.1.2012  to 20.01.2012  (5 days)

7.Date of Joining
on or before 27.01.2012  (7 days)

8.Sending of final report to SPO
30.01.2012  (3 days)


தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தஞ்சாவூர்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் 158 உடற்கல்வி ஆசிரியர்களும், 155 ஓவிய ஆசிரியர்களும், 209 இசை மற்றும் தையல் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பதவிக்கான நியமனம் தொடர்பான கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவம் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், மாவட்ட கல்வி அலுவலங்கங்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம் தஞ்சாவூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் அனைவருக்கும் கல்வி இயக்கம், மேம்பாலம், தஞ்சாவூர், அனைத்து ஒன்றியங்களிலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்விஅலுவலங்களில் தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை www.thanjavur.nic.in என்ற வலைத்தளத்திலும் பதவியிறக்கம் செய்து கொள்ளலாம். அ4 தாளில் தட்டச்சு அல்லது கம்ப்யூட்டர் அச்சு மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 12ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலம், பனகல் கட்டிடம், தஞ்சாவூர் -613001.விண்ணப்பத்துடன் வயது டி.சி., சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பக பதிவு அட்டை, பணி அனுபவச் சான்று மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட நகல்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்து விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும்.

APPLICATION FOR PART TIME TEACHERS


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு



தூத்துக்குடி : 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (சி.இ. ஓ ஆபிஸ்), கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (டி.இ.ஓ ஆபிஸ்) வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பம் செய்ய வயது வரம்பு கிடையாது. உடற்கல்வி ஆசிரியரை பொறுத்தமட்டில் 31 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 7 நடுநிலைப்பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளன.

ஓவிய ஆசிரியரை பொறுத்தமட்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20 பணியிடங்களும், 7 நடுநிலைப்பள்ளிகளிலும் காலியிடங்கள் உள்ளன. தையல் ஆசிரியரை பொறுத்தமட்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20 பணியிடங்களும், 3 நடுநிலைப்பள்ளிகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. இசை ஆசிரியரை பொறுத்தமட்டில் 25 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 4 நடுநிலைப்பள்ளிகளிலும் காலியிடங்கள் உள்ளன.தொடக்க கல்வித்துறையில் நடுநிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே காலி பணியிடங்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இம் மாவட்டத்தில் 126 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டதின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 இது குறித்து மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, உள்ளாட்சி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக கொடுக்கப்படும்.

இதற்குத் தேவையான தகுதி, விண்ணப்பபடிவம் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகல்வித்துறை, தொடக்ககல்வித்துறையின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் படிவத்தின் மாதிரியில் விண்ணபத்தைத் தட்டச்சு செய்து உரிய சான்றிதழ்களுடன் ரூ.5 ஸ்டாம்பு ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய கவருடன் வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ,நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்."இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
பெரம்பலூர்:"சிறப்பாசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது' என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை ஆகியப்பள்ளிகளில் பகுதிநேர தொழில் ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக நியமனம் மற்றும் தொகுப்பூதியம் முறையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதியான சிறப்பாசிரியர்களின் கல்வி தகுதி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கல்வி தகுதிகள் பெற்றவர்கள் பெரம்பலூர் சி.இ.ஓ., அலுவலகத்தில் பணியிடம் தொடர்பான விவரங்கள் தகவல் பலகைகள் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்ர்த்து தெரிந்து கொண்டு உரிய விண்ணப்பத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அளிக்க கடைசி தேதி 9ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுக்கோட்டை: அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8வது வகுப்புகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தகுதியுடைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பகுதிநேர அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பதிவுமூப்பு பட்டியலின் அடிப்படையில் மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் புதுக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாதம் 10ம் தேதி மாலை ஐந்துமணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், புதுக்கோட்டை-1 என்ற முகவரிக்கும் இம்மாதம் 15ம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும். இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புவோர் புதுக்கோட்டையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பகுதிநேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஓவிய ஆசிரியர் 402, உடற்கல்வி ஆசிரியர் 405, தையல், இசை, பாட்டு ஆசிரியர்கள் 414 பேர் உள்ளிட்ட 1221 ஆசிரியர் பணிக்கான காலி இடங்கள் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஓவியம் : எஸ்.எஸ். எல்.சி.,யுடன், தொழில் கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் 3 ஆண்டு டிராயிங் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் டிராயிங் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இதேப்போல் அரசின் தொழில்நுட்ப தேர்வில் பிரிஹேண்ட் அவுட்லைன் அன்ட் மாடல் டிராயிங் அல்லது தமிழக அரசின் மாமல்லபுர சிற்பகலை இன்ஸ்டியூட்டில் டிப்ளமோ சான்று பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.
உடற்கல்வி : பிரி யூனிவர்சிட்டியில் ஹயர்செகன்டரி அல்லது (செகன்டரி கிரேடு சீனியர் பேசிக்) டி.எஸ்.எல்.சி., முடித்து அரசின் உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ்(ஹயர் கிரேடு) பயிற்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி.,யுடன் அரசின் (லோயர் கிரேடு) பிசிக்கல் எஜிகேஷன் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதேபோல் இளங்கலையில் உடற்கல்வி பட்டம் அல்லது ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லூரியில் பி.பி. இ.எஸ்., பெற்றிருத்தல் வேண்டும்.
நேரடியாக அண்ணாமலை பல்கலையில் எம்.பி.இ.எஸ்., பட்டம்(இளங்கலை படிக்காமல்) அல்லது சென்னை ஒய்.எம்.சி.ஏ.,உடற் கல்வி கல்லூரியில் பி.எம்.எஸ்., அல்லது அதே அந்தஸ்த்தில் ஏதேனும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் அல்லது உடற்கல்வி முதுகலை முழுநேர பட்டம் பெற்றிருத்தல் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருத்தல்வேண்டும்.
தையல் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்கல்வி நீடில் ஒர்க் அண்ட் டிரஸ் மேக்கிங்(ஹயர் கிரேடு) மற்றும் எம்ராய்டரி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இசை, பாட்டு: பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்கல்வியில் இசையில் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் சங்கீத பூஷண் பட்டம் அல்லது சென்னை அரசு தேர்வுத்துறையால் சங்கீத வித்வான் விருதுடன் ஆசியர் பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.
மாதிரி விண்ணப்பங்கள் சி.இ.ஓ., அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், மருத்துவமனை வீதி, விழுப் புரம் என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண் டும். விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டுமென மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ.,(பொ) குப்புசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிய 756 பகுதி நேர சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சிவசண்முகராஜா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக அரசு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 756 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளது. இப்பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படும் பணியிடம் மற்றும் அதற்கான கல்வித் தகுதி, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியமனம் செய்யப்படும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 5,000 மட்டும் ஊதியம் வழங்கப்படும். இந்த நியமனம் எக்காரணத்தை கொண்டும் நிரந்தரம் ஆக்கப்பட மாட்டாது. இத்திட்டம் முடிவடைந்தால் நியமனம் ரத்து செய்யப்படும். இதன்படி 262 உடற்கல்வி ஆசிரியர்கள், 250 கலை ஆசிரியர்கள், மற்றும் இசை, தையல், தோட்டக்கலை, கணினி பயன்பாடுகள், வாழ்வியல் மற்றும் பேச்சுத்திறன், கட்டுமானப்பணி ஆகிய 274 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம், காஞ்சிபுரம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் (எஸ்.எஸ்.ஏ) டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள், காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலக்ததில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் சிவசண்முகராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment