Monday, April 16, 2012

கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம்

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியைப் பெற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தற்போதைய உலகம் கணினி உலகம். தற்பொழுது நடைபெறும் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் கணினியை சார்ந்தே அமைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு கணினி வழி கல்வி வழங்குவது இன்றியமையாததாக உள்ளது. இதன் அடிப்படையில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம், 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் ‘BOOT’ அடிப்படையில் நடைமுறைப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) நிறுவுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) துவக்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். 
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களை பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் பள்ளிகளின் அலுவலக பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment