Wednesday, April 18, 2012

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம்: சிக்கல்

விருதுநகர்: தமிழக பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பகுதி நேர ஆசிரியர்கள் மார்ச் 5 ல் பணி நியமனம் செய்யப்பட்டனர். ரூ. 5000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில், பணி நியமன ஆசிரியர்கள் வருகைப்பதிவை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பல பள்ளிகள் வழங்கவில்லை. வருகைப்பதிவேடு பெற்ற பின்னர் தான், கிராமக்கல்வி குழு கணக்கிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் வழங்கப்படும்.

 அதன் பின் கல்விக்குழு கணக்கில் இருந்து தலைமையாசிரியர்கள் சம்பளத்தைஎடுத்து , பகுதிநேர ஆசிரியர்களுக்கு காசோலையாக வழங்குவர். இந்த பணிகளிலும் தாமதம் ஏற்படுவதால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது.

1 comment:

  1. பகுதி நேர பணி நியமன ஆசிரியர்கள் வருகைப்பதிவை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் , அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பல பள்ளிகள் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் வருகைப்பதிவேடு சமர்ப்பிக்க பட்டும் சம்பளம் பெறுவதில் சிக்கல் உள்ளது.

    ReplyDelete