Monday, April 30, 2012

55 ஆயிரம் ஆசிரியர்கள் - 14 ஆயிரமாகத் தேய்ந்து போயுள்ளது

சென்னை:""அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு, தற்போது 14 ஆயிரமாகத் தேய்ந்து போயுள்ளது,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


ஓராண்டில் மூன்றாவது அமைச்சர்: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த ஓராண்டு முடிவதற்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். முதலில் இருந்த சி.வி.சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அதன் பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். அடுத்து வந்த அமைச்சர் சிவபதி, 26 ஆயிரத்து 686 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.

தற்போது பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சிவபதி, 14 ஆயிரத்து 349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார். ஆக, 55 ஆயிரம் ஆசிரியர்கள் என்ற அறிவிப்பு, 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. இந்த ஆட்சியில் ஆரம்பம் முதலே, பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment