Tuesday, February 11, 2014

திருவள்ளூர் ஆட்சியரை சந்திக்க முடிவு

திருவள்ளூர் மாவட்ட அனைத்து கணினி பட்டதாரிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் வரும் திங்கள் (17/02/14) அன்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் வேலை வாய்ப்பு குறித்து மனு அளிப்பது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள கணினி பட்டதாரிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள், திருவள்ளூருக்கு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவிலான இந்த முதல் முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நல்க வேண்டும். அதாவது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
வேலை வழங்க வேண்டும், என கணினி பட்டதாரிகளும், இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என இரண்டு மனுக்கள் அளிக்கப்பட உள்ளது. அதில், நமது கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கும்.
மனு அளிப்பது மட்டுமே, அன்றை நடவடிக்கை. மற்றபடி, போராட்மோ, ஆர்ப்பாட்டமோ எதுவும் கிடையாது. எனவே, எந்தவிதமான தயக்கமும் இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, computertrl@gmail.com

No comments:

Post a Comment