Monday, February 17, 2014

புலி வருது... புலி வருது... வந்தே விட்டது!

திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு தங்களின் பணி வாய்ப்பு குறித்து அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என கடந்த 20 நாட்களாக தீவிர முயற்சியி்ல் ஈடுபட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று வாரங்களாக, ஆர்.கே.பேட்டையில் கூட்டங்களை நடத்தியது.
இதில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றின.

கணினி பட்டதாரிகள்,
பகுதி நேர கணினி ஆசிரியர்கள்
அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்

என பல பிரிவுகள் உதயமாகின.

இதனால், ஒருங்கிணைப்பாளர் ஒதுங்கினார்.


இருப்பினும், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அளித்த உறுதிமொழியின் படி,

நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் வேலை வாய்ப்பு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு மனுக்கள் இருவர் தலைமையில் அளிக்கப்பட்டன.

கணினி பட்டதாரிகள் சார்பில் மணிகண்டன்,
அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் வெங்கடேசன் தலைமையிலும்
மனுக்கள் வழங்கப்ட்டன.
இருதரப்பிலும், ஆண்கள், பெண்கள் என தலா 70 பேர் வந்திருந்தனர். வந்திருந்தவர்களுக்கு மனு அளித்ததும், பத்திரிகை மற்றும் கலைஞர், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியானதில் முழு திருப்தி.

இன்றைய நடவடிக்கை ஒருங்கிணைப்பாளருக்கும், அவருடன் முழு அளவில் போராடியவர்களுக்கும் திருப்தி.

இந்த முதல் முயற்சிகக்கு பின், அடுத்த நடவடிக்கை என்ன? அப்போது என்பது தான் வந்திருந்த அனைவரின் கேள்வியாக இருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையின் போது, .மேலும்  பலர் ஆர்வமாக கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.
அந்த அளவில், இன்றைய நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
வருகை தந்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றி... நன்றி...
இன்றைய நிகழ்ச்சிக்கான செலவுத்தொகையை ஏற்றுக்கொண்ட நண்பர் அய்யப்பன்(அம்மையார்குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளி பாலாபுரம்)  அவர்களுக்கும் நமது கூட்டமைப்பின் சார்பில் நன்றி.

No comments:

Post a Comment