Saturday, February 8, 2014

கூட்டணி தான்; பிரிவினை இல்லை


கடந்த பல ஆண்டுகளாக சங்கம் அமைத்து மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள், வழக்குகளை சந்தித்து வரும் நமது சீனியர்களுக்கு, போட்டியாக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
 
கணினி பட்டதாரிகளின் இன்றைய நிலை குறித்த அவசர அவசியம் கருதி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்துவதற்காக அச்சிடப்பட்ட பேனர் தான் நீங்கள் மேலே காண்பது.
இதில், எந்தவிதமான உள்நோக்கமோ, பிறர் மனதை காயப்படுத்தும் எண்ணமோ இல்லை. மேலும், இதில், தலைவர், செயலர், பொருளாளர் என எவரும் இல்லை.

திருவள்ளூரில் கணினி பட்டதாரிகளை ஒருங்கிணைத்து இதுவரை எந்த சங்கமும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த வாரம் நடத்திய கூட்டத்திற்கு பின், இதுவரை எங்களிடம் 450 பட்டதாரிகளின் தொடர்பு விவரங்கள் கிடைத்துள்ளது. நாளை அவர்களின் இ–மெயிலுக்கு அனுப்ப உள்ள தகவல் மூலம், இந்த விவரம் அனைவருக்கும் (450) கிடைக்கும்.

எந்தவொரு அமைப்பு அல்லது சங்கத்தில் இணைந்து செயல்பட்டவும் நாங்கள் தயார். கணினி பட்டதாரிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது மட்டுமே நமது அனைவரின் நோக்கம். இணைந்து செயல்படுவோம். வெற்றி நிச்சயம்.
விரைவில் இந்த பேனர் படம் மாற்றப்படும்.
computertrl@gmail.com
http://tamilnadu-aasiriyar.blogspot.in/
See more

No comments:

Post a Comment