Wednesday, February 12, 2014

அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்!




திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் கடந்த 2ம் தேதி நடந்த கூட்டத்திற்கு அனைவரையும் ஒருங்கிணைத்தவர் M.sc., B.ed., computer science பட்டதாரி,
ssa பகுதி நேர ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார்.

 2ம் தேதி நடந்த கூட்டத்திற்கு கணிசமான பட்டதாரிகள் வந்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் கூட...்டத்தில் தங்கள் கருத்துக்களை பேச முன்வரவில்லை.

கூட்டத்திற்கு வந்திருந்த cs b.ed., பட்டதாரிகளின் கருத்து:
பகுதிநேர கணினி ஆசிரியர்கள் தங்களின் பணியை நிரந்தரம் செய்து கொள்வதற்கு, தங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர் என அதிருப்தி அடைந்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களின் கருத்து:

 கணினி பட்டதாரிகள் அவர்களின் வேலை வாய்ப்புக்கு தங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இந்த கருத்துக்கள், 9ம் தேதி நடந்த இரண்டாவது கூட்டத்திற்கு பின் தெரியவந்துள்ளது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் பகுதி நேர ஆசிரியராகவும், கணினி பட்டதாரியாகவும் இருப்பதும், கூட்டத்தில் அதிகமான நேரம் அவரே பேசியதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்த இரண்டு வாரங்களாக கூட்டம் நடத்தி, அதை தமிழகம் முழுவதும் பரபரப்பாக செய்தியாக்கிய அந்த நபர், தனது அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுகிறார்.

இனி, யாராவது திருவள்ளூர் மாவட்ட பகுதிநேர மற்றும் கணினி பட்டதாரிகள் குறித்து ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால், அது குறித்து அவருக்கும் தகவல் தர கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்டத்தின் எந்த பகுதியில் கூட்டம் நடந்தாலும் அவர் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.

குறிப்பு: வரும் திங்கள் அன்று(17/02/14) திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் திட்டமும் கைவிடப்படுகிறது. computertrl@gmail.com

1 comment:

  1. நாடாளுமன்றத் தேர்தலுக்கு யார் யாரோ நம்மை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியவில்லை போலும்.

    ReplyDelete