Sunday, February 9, 2014

போற்கொடி!

கணினி பட்டதாரிகள் தங்கள் வேலை வாய்ப்பு குறித்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
நேற்று ஆர்.கே.பேட்டையில் நடந்த கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்களாக உள்ள கணினி பி.எட்., பட்டதாரிகள் மட்டும் தங்களுக்காக இந்த கூட்டத்தை நடத்துவதாகவும், இதில் தங்களை புறக்கணிப்பதாக இதர பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் கிராஸ் மேஜர் கணினி பி.எட்., பட்டதாரிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
பலரும் மனஸ்தாபத்தில் உள்ளனர். அடுத்தவரின் வேலையை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கண்டிப்பாக உண்டு.
யாரையும் முன்னிலைப்படுத்தவோ, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் தரவோ இந்த கூட்டம் நடத்தப்படவில்லை.
வரும் 17ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணினி பி.எட்., பட்டதாரிகள், கணினி பகுதிநேர ஆசிரியர்கள் அல்லது அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் தனித்தனியாக அல்லது கூட்டாக ஒரே மனுவாக அளிக்கலாம் என பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கணினி பி.எட்., பட்டதாரிகள்

பகுதிநேர கணினி ஆசிரியர்கள்

அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகள் நேற்றைய கூட்டத்தில் தோன்றியுள்ளது.

இதனால், முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
தீர்ப்பு உங்கள் கையி்ல்...

No comments:

Post a Comment