Saturday, February 15, 2014

மவுனம் கலைகிறது!




திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நடந்த கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள், தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் கலெக்டரிடம் அளிக்கப்பட உள்ள மனுவில் இந்த தீர்மானங்கள்  இடம் பெற்றுள்ளது.

நாளை திண்டுக்கல், விழுப்புரம், கரூர், பெரம்பலுார், கோவை உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணினி பட்டதாரிகள் மனு அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், முன்னோடியாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்டம் சும்மா இருப்பதா என நம் நண்பர்கள் புலம்பி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையின் பேரில், 16/02/14 அன்று காலை மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், கணினி பி.எட்., பட்டதாரிகள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள்( கணினி மட்டும்) கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெளிவாக, முடிவாக அறிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment