Monday, December 19, 2011

பகுதி நேர ஆசிரியர் பணிக்கு 1,624 பேர் விண்ணப்பிப்பு

திருவள்ளூர்:அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,624 பேர் விண்ணப்பித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் 809 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 268 பேர் கலை பாடத்துக்கும், 268 பேர் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்துக்கும், 273 பேர் தொழிற்கல்வி பாடத்துக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
இன்று முதல் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அவர்கள், வரும் 26ம் தேதி முதல் ஜன., 15 வரை நேர்முகத் தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment