Saturday, December 10, 2011

ஆசிரியர் நியமனம்: ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை, டிச.9: ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதி முதல்வர் வெளியிட்ட உத்தரவில் 11,593 கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும் அதேவேளையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இதுவரை நடைபெற்று வந்த முறைப்படி வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறது. மேலும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வண்ணம் அரசு வெளிப்படையான நியமனக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment