Friday, December 16, 2011

வேலைவாய்ப்பு அலுவலக ஆவணங்கள் மாயம்?

சென்னை:தமிழ்நாடு அரசு தேர்வாணய தேர்வில் ஊழல் நடந்திருப்பதை ‌கருத்தில் கொண்டு புலானாய்வுத்துறை ‌அதிகாரி்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. இருந்த‌போதிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் ஆவணங்கள் 2010 செப்டம்பரில் இணையதளத்தில் மாற்றும் போது மாயமாகின. அந்த ஆவணங்களில் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் பதிவுகள் அடங்கும். சமீபத்தில் நடந்த கால்நடை ‌டாக்டர் ‌தேர்வு அறிவிப்பின்‌போது 853 கால்நடை டாக்டர் பணியிடங்களுக்கு 4000 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது தேர்வாணையம்.

இதில் மாநிலத்தில் 1600 ‌டாக்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பலருக்கு அழைப்பு கடிதம் அவர்களது பெயரில் கிடைக்கவில்லை என தெரிவித்ததாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். இது போல சென்னை பட்டாபிராமில் வசிக்கும் அருண்குமார் தான் கடந்த ‌சென்னை கால்நடை கல்லூரியில் பட்டம் பெற்றேன். என்னுடன் சக மாணவர்களும் சேர்ந்து ஆன்லைன் பதிவு டிசம்பர் 2010ல் செய்தோம். இந்நிலையில்தான் தங்களது பெயர் பதிவில் இல்லை ‌என தெரியவந்தது ‌என்றார். இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் செயலாளர் மோகன் பியாரே கூறுகையில் இணையதளத்தில் பெயர் பதிவு இன்னும் முழுமையடையவில்லை எனவும் விரைவில் சரிசெய்துவிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment