Monday, December 5, 2011

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கணினி இலவசப் பயிற்சித் திட்டம்

கோபி, டிச. 4: 
கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆட்சியர் வே.க. சண்முகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 196 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 59,531 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது:
 கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளதாக, மாணவர் - மாணவியர்க்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக இந்த ஆண்டு ரூ. 1,300 கோடியும், அடுத்த ஆண்டு ரூ. 2,300 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


No comments:

Post a Comment