Sunday, December 25, 2011

பகுதி நேர ஆசிரியர் நியமனம்: நாளை நேர்காணல்

திருவள்ளூர் : பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரி பார்த்தலுக்கான நேர்காணல், நாளை (திங்கட்கிழமை) முதல் நடக்கவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், 2010-11ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தலுக்கான நேர்காணல், நாளை (திங்கட்கிழமை) முதல் நடக்கவுள்ளது.
விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட தேதியில், பொது மற்றும் தொழிற்கல்வி, இதர தனித்திறன் குறித்த சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை, அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று கொண்டு வரவேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடங்கள் உடல்நலக் கல்வி - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.கலை (ஓவியம்) - ஞான வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். தையல்/இசை/கணினி - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
நேர்காணல் கடிதம் பெறாதவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளவும். மொபைல் எண்கள்: 97888 59098, 73730 02991, 97888 59100 இத்தகவலை அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. hello pandian sir,
    what about namakkal district sir? if u know pls inform sir

    ReplyDelete