Friday, December 23, 2011

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க குழு

விருதுநகர்: எஸ்.எஸ்.ஏ., சார்பில் நியமிக்க உள்ள பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ., சார்பில், இசை, ஓவியம், தொழிற்கல்வி, உடற்கல்வி, கம்ப்யூட்டர் போன்ற பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக, 15 ஆயிரத்து 549 பேர் நியமிக்க உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்டுள்ளன. சீனியாரிட்டி, உயர் கல்வித்தகுதி, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நியமனம் செய்ய உள்ளனர்.
இவர்களை தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. இதில், முதன்மை கல்வி அதிகாரி, எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அதிகாரி, தேர்வு செய்யப்படும் துறையில் உள்ள ஒரு ஆசிரியரும் பங்கு பெறுவார்கள். இக்குழு தேர்வு செய்யும் ஆசிரியர்களுக்கே பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment