Monday, December 19, 2011

சிறப்பு ஆசிரியர் பணி விண்ணப்பிக்க டிச., 21 கடைசி

சிவகங்கை : சிறப்பு ஆசிரியர் தற்காலிக பணிக்கென பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க டிச.,21 அன்று கடைசிநாள் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் தோட்டக்கலை, வாழ்வியல் மற்றும் தகவல் திறன், "மேஷனரி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்' பாடங்களுக்கென தொகுப்பூதிய (மாதம் ரூ.5,000) அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப ஒப்படைக்க கடைசி நாள் டிச.,21. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக வழங்கவேண்டும்.

1 comment: