Saturday, December 17, 2011

கற்கும் பாரத திட்ட பணியில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர் : "கற்கும் பாரதம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணிக்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் தற்காலிக தொகுப்பூதிய முறையிலான ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர்கள் 26 பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்திருத்தல் வேண்டும். மாதம் ஊதியம் ரூ.6,000 வழங்கப்படும்.
மையப்பொறுப்பாளர் பணிக்கு குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 2,000 வழங்கப்படும்.
தகுதியும், விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதி காலை10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்டர்வியூ நடக்கிறது.காலிப்பணியிட விவரங்கள் அந்தந்த யூனியனில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர் மட்டு மே விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment